மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றிப்பெற்ற கோவை மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் வருகை

மலேசியாவில் கடந்த மே மாதம் 15ம் தேதி நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றி பெற்ற கோவை SSVM பள்ளியை சேர்ந்த 5 மாணவர்களும், இந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த மாணவர் கெளதம், வேலம்மாள் போதி கேம்பஸை சேர்ந்த மாணவர் கீர்த்தி ரோகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற வந்தனர்.


கோவை: கடந்த மே மாதம் 15ம் தேதி மலேசியாவில் உள்ள Lincoln பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.

இந்நிலையில் யோகா போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்ற கோவை SSVM பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் நிகிலேஷ், ஹரிஸ் கார்த்தி, ஹரி ஷர்வேஷ், அபய், ஷஸ்வத் (2nd place), இந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த மாணவர் கெளதம், வேலம்மாள் போதி கேம்பஸை சேர்ந்த மாணவர் கீர்த்தி ரோகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை இன்று ஜூன்.6 சந்தித்து வாழ்த்து பெற வருகை புரிந்தனர்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உள்ள யோகா போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...