கேரளாவில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

கேரள மாநிலம் கண்ணங்குழி என்ற இடத்தில் வீட்டின் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுத்தையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.


கோவை: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி தாலுகா பகுதி கண்ணங்குழி என்ற இடத்தில் ஷிபு என்பவர் வீட்டின் பின்புறம் உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று தவறி விழுந்து உள்ளது.

கிணற்றில் இருந்து சத்தம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த ஷிபு வந்து பார்த்து உள்ளார். அப்போது, கிணற்றில் சிறுத்தை ஒன்று சத்தம் போட்டு வெளியே வரமுடியாமல் இருந்து உள்ளது. இதை தொடர்ந்து அவர்வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி கிணற்றில் பெரிய கம்பை இறக்கி சிறுத்தையை பத்திரமாக மீட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...