கேரளாவில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

கேரள மாநிலம் கண்ணங்குழி என்ற இடத்தில் வீட்டின் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுத்தையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.


கோவை: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி தாலுகா பகுதி கண்ணங்குழி என்ற இடத்தில் ஷிபு என்பவர் வீட்டின் பின்புறம் உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று தவறி விழுந்து உள்ளது.

கிணற்றில் இருந்து சத்தம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த ஷிபு வந்து பார்த்து உள்ளார். அப்போது, கிணற்றில் சிறுத்தை ஒன்று சத்தம் போட்டு வெளியே வரமுடியாமல் இருந்து உள்ளது. இதை தொடர்ந்து அவர்வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி கிணற்றில் பெரிய கம்பை இறக்கி சிறுத்தையை பத்திரமாக மீட்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...