நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்க ரூ.20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கைது

சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி என்பவரிடம், நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று வழங்க 20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராஜை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


கோவை: கோவை, சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி. இவா் கோவை குறிச்சி சிட்கோவில் உள்ள தனது நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று கோரி கோவைப்புதூா் தீயணைப்பு நிலையத்தில் விண்ணப்பித்துள்ளார்.

தடையில்லாச் சான்று வழங்குவதற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சிவராஜ் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்புசாமி இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவா்களின் ஆலோசனையின் பேரில் கருப்புசாமி ரூ.20,000 சிவராஜிடம் நேற்று ஜூன்.7 கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் சிவராஜை கைது செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...