கோவை மாவட்டத்தில் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அறிவுரை

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது புதுமைப்பெண் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 15,909 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பட்டனர்.

இந்நிலையில், 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வரால் கடந்த மார்ச் 11-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது புதுமைப்பெண் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...