கோவையில் 5வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் இலவச சேர்க்கை – ஆட்சியர் அறிவிப்பு

பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் சேர்த்து இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று ஜூன்.11 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் 12, உயர்நிலைப்பள்ளி 1, மேல்நிலைப்பள்ளிகள் 2 என மொத்தம் 15 பள்ளிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தொடக்கப் பள்ளிகள் 11, நடுநிலைப் பள்ளிகள் 2, உயர்நிலைப் பள்ளி 2, மேல்நிலைப் பள்ளிகள் 1 என மொத்தம் 16 பள்ளிகளும் உள்ளன.

தற்போது இப்பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத முன்னுரிமையும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் 7.5 சதவீத முன்னுரிமையும், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இதுபோன்று கல்வி உதவித்தொகை, இலவசநோட்டு புத்தகம், புத்தகப்பை, மிதிவண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் சேர்த்து இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...