கோவை வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஜூன் 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...