உடுமலை அருகே வளையபாளையத்தில் தென்னைமரங்களை வேரோடு பிடுங்கி காட்டு யானைகள் அட்டகாசம்

வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் ஐந்து வருடங்களாக வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தின. சேதமடைந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து ஐந்து வருடமாக பராமரிக்கப்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள மின் வேலியையும் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.



பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறையினரிடம் பேசிய விவசாயிகள், காட்டு யானைகள் கடந்த சில தினங்களாகவே விவசாய நிலங்களுக்குள் வந்த வண்ணம் உள்ளது.

எனவே வனத்துறையினர் சுற்றுகாவல் பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான தென்னை மரங்களுக்கும் மின்வேலிக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...