பல்லடம் அருகே கரைப்புதூரில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் நிறத்தில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் – மக்கள் அதிர்ச்சி

அதிகப்படியான டையிங் நிறைந்த பகுதியான கரைபுதூரில், வினியோகிக்கப்பட்ட குடிநீர் கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை தூய்மைப்படுத்த அரசு போர்க்கால அடிப்பைடையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் என்ற பகுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் இணைப்பு குழாய்களில் இருந்து விதவிதமான கலரில் தண்ணீர் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரைப்புதூர், டி.கே.டி போன்ற பகுதிகள் அதிகப்படியான டையிங் நிறைந்த பகுதியாகும். இந்த டையிங்களால் பல நாட்களாகவே இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுவிட்டது. இந்நிலையில் இன்று பொதுமக்கள் குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் பெற்றபோது கருப்பு, மஞ்சள், சிவப்பு போன்ற பல்வேறு கலர்களில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.



இந்தசம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், நிலத்தடி நீரை முற்றிலும் பாதுகாக்கவும், கெட்டுப்போன நீரை தூய்மைப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...