பல்லடம் அருகே கரைப்புதூரில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் நிறத்தில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் – மக்கள் அதிர்ச்சி

அதிகப்படியான டையிங் நிறைந்த பகுதியான கரைபுதூரில், வினியோகிக்கப்பட்ட குடிநீர் கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை தூய்மைப்படுத்த அரசு போர்க்கால அடிப்பைடையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் என்ற பகுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் இணைப்பு குழாய்களில் இருந்து விதவிதமான கலரில் தண்ணீர் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரைப்புதூர், டி.கே.டி போன்ற பகுதிகள் அதிகப்படியான டையிங் நிறைந்த பகுதியாகும். இந்த டையிங்களால் பல நாட்களாகவே இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுவிட்டது. இந்நிலையில் இன்று பொதுமக்கள் குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் பெற்றபோது கருப்பு, மஞ்சள், சிவப்பு போன்ற பல்வேறு கலர்களில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.



இந்தசம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், நிலத்தடி நீரை முற்றிலும் பாதுகாக்கவும், கெட்டுப்போன நீரை தூய்மைப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...