ஆனைகட்டி அருகே புளியபதி மலைப்பகுதியில் சிறுத்தைகளுக்குள் சண்டை - ஆண் சிறுத்தை காயம்

புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன. இதில் காயமடைந்த ஆண் சிறுத்தை, சிகிச்சை அளிக்க சென்ற வனத்துறையினரை துரத்தியதால் பதற்றம் நிலவியது.


கோவை: தமிழ்நாடு-கேரளா எல்லையான கோவை, ஆனைகட்டி அடுத்து உள்ள புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன. இதில் ஆண் சிறுத்தை காயங்களுடன் கேரள மாநிலத்திற்கு சொந்தமான வனத்தில் படுத்துக் கொண்டு இருந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள், கேரள மாநில வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் காயங்களுடன் படுத்து இருந்த சிறுத்தை அருகில் சென்ற போது திடீரென வனத் துறையினரை துரத்தியது.



நீண்ட முயற்சிக்கு பின்னர் காயம் அடைந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வலையால் மூடி அந்த சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.

பின்னர் அங்கு உள்ள சைலண்ட் வேலி வனத்துறை முகாமிற்கு கொண்டு சென்று காயம் அடைந்த சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையிலே, காயம் பட்ட சிறுத்தையை பிடித்து சென்ற வனத் துறையினரை தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...