கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

கோவை வெள்ளியங்கிரி கோவில் அன்னதான அறையில் காட்டு யானை புகுந்த சம்பவம் நேற்று நடந்தது. வாழைப்பழங்கள் வீசி யானையை வெளியேற்றியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. அடர் வனப்பகுதி என்பதால் அவ்வப்போது உணவு தேடி காட்டு யானைகள் அங்குள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்றைய தினம் ஜூன்.13 ஒற்றை காட்டு யானை வெள்ளியங்கிரி கோவிலுக்கு உட்பட்ட அன்னதான உணவு பொருட்கள் வைக்கக்கூடி கூடத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனை அடுத்து நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு வாழைப்பழங்களை வீசி காட்டு யானையை அன்னதான கூடத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். 

மேலும் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவும் யானை போன்ற காட்டு மிருகங்கள் கண்ணில் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...