கோவை கொடிசியாவில் இன்று முப்பெரும் விழா - அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகின்றனர். விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறார்.


கோவை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, கலைஞர் நூற்றாண்டு விழா என மூன்று நிகழ்வுகளை இணைத்து முப்பெரும் விழாவாக இன்று ஜூன்.15 கோவையில் கொடிசியா மைதானத்தில் நடத்தப்படுகிறது.

அதன்படி இன்று மாலை இந்த விழா துவங்க உள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் தமிழக எம்.பி க்கள் 40 பேர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்களான வைகோ, முத்தரசன், உட்பட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் பார்த்து வருகிறார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகை புரிய உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பேர் அமர இருக்கைகள் போடப்பட்டு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக இப்பகுதி மட்டுமல்லாது கொடிசியா சுற்றுப்புற பகுதிகள், விமான நிலையம் என சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...