ஈஷா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முற்போக்கு இயக்கத்தினர் புகார்

தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முட்டத்துவயல் பகுதியில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக மக்களிடம் கருத்து கேட்காமலும், விதிமுறைகளை மீறி மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அங்கு விதிமீறல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மின் தகன மேடை அமைப்பதில் முறைகேடு உள்ளதா என்பது குறித்து கண்டறிய தபெதிக, தமிழ்புலிகள் அமைப்பு உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.

அப்போது அவர்களை ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முற்போக்கு அமைப்பினர்கள் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததோடு, தாக்குதல் நடத்தினர். இது குறித்து முற்போக்கு அமைப்பினர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் முற்போக்கு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் இன்று ஜூன்.18 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...