கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாமனார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது

கணவருடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் போலீசாரிடம் மனைவி கூறியதால், ஆத்திரமடைந்த கணவர், மாமனார் வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதனையடுத்து மருமகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆா்.எஸ்.புரம், மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (60), ஆட்டோ ஓட்டுநா். இவரது மகளுக்கும், வேடப்பட்டி வி.டி.எஸ். நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில் மதன்ராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல, இருவருக்கும் இடையே திங்கள்கிழமை ஜூன்.17ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து, மதன்ராஜ் மீது அவரது மனைவி தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, மதன்ராஜூடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ், மீனாட்சி நகரில் உள்ள மனைவியின் தந்தை ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைப் பார்த்த அருகிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா். அதற்குள் வீட்டின் முன்பகுதியில் இருந்த சில பொருள்கள் மற்றும் வீட்டின் முன்பக்க கதவு ஆகியவை தீயில் சேதமடைந்தன. பின்னர் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஆா்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...