எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா – துடியலூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை நிர்வாகிகள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


கோவை: கோவை துடியலூரில் SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் துவக்க தின கல்வெட்டையும் திறந்து வைத்தனர். SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துடியலூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி தலைவர் யாசர் அரபாத் தலைமை ஏற்க, தொகுதி செயலாளர் கமருதீன் முன்னிலை வகுக்க, தொகுதியின் அமைப்புச் செயலாளர் அப்துல் லத்தீப் மற்றும் சக நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடி ஏற்றினர்.



தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பசியற்ற, பயமற்ற இந்தியாவை கட்டமைக்க வேண்டும், மதவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்னும் சூழல் இந்திய தேசத்தில் நிலவ வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...