எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா – துடியலூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை நிர்வாகிகள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


கோவை: கோவை துடியலூரில் SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் துவக்க தின கல்வெட்டையும் திறந்து வைத்தனர். SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துடியலூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி தலைவர் யாசர் அரபாத் தலைமை ஏற்க, தொகுதி செயலாளர் கமருதீன் முன்னிலை வகுக்க, தொகுதியின் அமைப்புச் செயலாளர் அப்துல் லத்தீப் மற்றும் சக நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடி ஏற்றினர்.



தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பசியற்ற, பயமற்ற இந்தியாவை கட்டமைக்க வேண்டும், மதவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்னும் சூழல் இந்திய தேசத்தில் நிலவ வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...