காவல்துறையும் ஆளும் கட்சியினரும் இணைந்தே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைக்கின்றனர்- மக்கள் அதிகாரம் புகார்


திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாயன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இணைந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவயிடத்திற்கு வந்த கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் பெண்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அமைதியான முறையில் கலைந்து சென்ற நிலையில் ஒரு பெண்ணை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் கடுமையாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து, கோவை காந்திபுரம் பகுதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் பகுதி பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையினர் பெண்கள் என்றும் கூட பார்க்காமல் கடுமையாக தாக்கினர். பல ஆண்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து, அடுத்த அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை அத்துமீறி கைது செய்தனர். அதில் 7 பேரை விசாரணையின் அடிப்படையில் காவலில் வைத்துள்ளனர். 20 பேரை பல்லடம் ரைஸ் மில் பகுதியில் சட்டவிரோதமாக பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், டாஸ்மாக் மூலம் அரசியல் கட்சியினர், அதிகாரிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அவினாசி தொகுதி எம்எல்ஏ-வே காவல்துறையை ஏவி மக்கள் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. 

தாமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் அந்த கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மக்கள் அதிகாரம் 2015 முதலே இதுகுறித்தான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. காவல் துறை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அரசியல் கட்சிகளும், காவல்துறையினரும் இணைந்தே கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து, இறுதி டாஸ்மாக் கடை இருக்கும் வரை மக்கள் அதிகாரம் போராடும்" என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...