கனமழை காரணமாக நொய்யல் பேரூர் படித்துறையில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

மழையால் பேரூர் படித்துறையில் எட்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கியடி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. ஆற்றில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகின்றது.



இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், கோவை நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நீராக மழை நீர் ஆற்றில் ஓடுகின்றது. இதனால் தண்ணீர் வராத பல்வேறு இடங்களிலும் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது.

நொய்யல் ஆற்றின் மிக முக்கியமான பகுதியான பேரூர் படித்துறையில் கடந்த எட்டு மாதங்களாக பெரிய அளவிலான நீர் வரத்து இல்லை. நொய்யல் ஆறு வறண்டது. இதனால் தர்ப்பணம் தருவோர் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருந்தனர். பேரூர் ஆற்றில் வெள்ளம் இல்லாததால் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதுமான பாசனமும், கால்நடைகளுக்கு தண்ணீரும் இல்லாமல் இருந்தன.



இந்த நிலையிலே கடந்த ஒரு வார காலமாக பொழிந்து வரும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, நொய்யல் பேரூர் படித்துறையிலும் ஓடுகிறது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. பொதுமக்கள் இதில் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வெள்ளம் வேகமாக செல்லும் பகுதிகளில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தினர். தர்ப்பணம் தருவோருக்கு தண்ணீர் அவசியம் என்ற நிலையில், ஆடி அமாவாசைக்கு தற்பொழுது வரும் வெள்ளம் போதுமானதாக இருக்கும் என புரோகிதர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். வறட்சி நீங்கும் விதமாக தொடர்ந்து மழை பொழியும் நிலையில், அதனை ரசிப்பதாகவும், நீர் நிலைகளில் போதுமானதாக பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும், அப்பகுதியில் அதிகாரிகள் அறிவுறுத்தியதனை அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...