கோவையில் நாட்டு வைத்தியரிடம் ரூ.40 லட்சம் மோசடி – அதிரடியாக மீட்ட கோவை சைபர் கிரைம் போலீசார்

சாய்பாபா காலனியில் சந்திரசேகர் என்ற நாட்டு வைத்தியரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சம் பணத்தை மீட்டு கோவை சைபர் கிரைம் போலீசார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை, சாய்பாபா காலனியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (70). இவர் நாட்டு வைத்தியா். இவரிடம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைப்பேசியில் பேசிய மா்ம நபா், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்கள் பெயரில் மும்பைக்கு வந்துள்ள கூரியரில் போதைப்பொருள் இருப்பதாகவும், இதனால் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சந்திரசேகரின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளார்.

அவரும், தனது வங்கிக் கணக்கு விவரங்களை அளித்துள்ளார். அதன்பின், சந்திரசேகரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தான் கூறும் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், சரிபார்த்துவிட்டு திருப்பிவிடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சந்திரசேகா் தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.40 லட்சத்தை, அவா் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், அவா் கூறியபடி பணத்தைத் திரும்ப அனுப்பவில்லை. பின்னர் இது குறித்து சைபா் கிரைம் போலீஸில், சந்திரசேகா் ஜூன் 13-ஆம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட மா்ம நபரின் வங்கிக் கணக்குகளை முடக்கினா்.இதைத் தொடா்ந்து முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து நீதிமன்றத்தின் மூலம் ரூ.40 லட்சத்தை மீட்டு சந்திரசேகரிடம் அண்மையில் ஒப்படைத்தனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...