மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகள்:

1. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பஞ்சப்படியை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும்.

2. அரசு ஊழியர்களைப் போல் மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்க வேண்டும்.

3. 2013 ஒப்பந்த உயர்வு 40% மீதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

4. பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

5. 2016 ஒப்பந்தப்படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் STERBS உடனடியாக வழங்க வேண்டும்.

6. பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்ப வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்.



இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...