கோவை எலக்ட்ரிக் நிறுவனத்தில் முகமூடி அணிந்த நபர்கள் திருட முயற்சி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள எலக்ட்ரிக் நிறுவனத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்த இரு நபர்கள் திருட முயற்சித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் பகுதியில் உள்ள "இயோடோம் எலக்ட்ரிக்" நிறுவனத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர்கள் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மேலாளராக ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக இரவு 7:00 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டு காலை 9 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று காலை நிறுவனத்திற்கு வந்த சத்தியமூர்த்தி, சிசிடிவி கேமராக்கள் திரும்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.



சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1:30 மணியளவில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் சுவர் ஏறி குதித்து, நிறுவனத்திற்குள் நுழைந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருட முயன்றது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த சத்தியமூர்த்தி, "முகமூடி அணிந்த நபர்கள் எங்கள் நிறுவனத்தில் திருட முடியாமல் சென்றுள்ளனர். கேட்டை வளைத்துள்ளனர். திருட முயற்சி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் நிறுவனம் உள்ள பகுதிக்கு இரவு ரோந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள சரவணம்பட்டி காவல்துறையினர், நள்ளிரவில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...