சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: காவல்துறைக்கு சவால் - கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவையில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு குறித்தும், காவலர்களுக்கான மருத்துவ முகாம் பற்றியும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் சைபர் குற்றங்கள் விசாரணை குறித்தும் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு சவால் என்று தெரிவித்துள்ளார். அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசிய அவர், சைபர் குற்றங்கள் குறித்து வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடத்தப்பட்ட இந்த முகாமில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் தொடர்பான மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. காவலர்களின் உடல்நல ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.



மேலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பொதுமக்களுக்கென பிரத்யேக வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் பாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.

சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதையும் தாண்டி சிலர் ஏமாந்து விடுவதாகவும் கவலை தெரிவித்த அவர், இது போன்ற வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்றும் உறுதியளித்தார்.



முகாம் துவக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சரவணன், சுகாசினி, உதவி ஆணையர் சேகர், ஸ்வர்கா பவுண்டேஷன் தாளாளர் தினேஷ் குமார் பாண்டியா, நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா, தாளாளர் குருபிரசாத் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...