அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தந்தை சொத்து அல்ல; ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து - கே.சி. பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு அதிமுக அவரது தந்தை சொத்து அல்ல. அதிமுக ஒன்றை கோடி தொண்டர்களின் சொத்து என்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல்கட்டமாக சசிகலாவை சந்திக்க இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.


Coimbatore: கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த 13 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தன் மீது அவதூறாக பேசியதன் அடிப்படையில் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுகவின் வாக்குகள் திமுகவிற்கு சென்றிருப்பதாகவும், கோவையிலும் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



"அதிமுகவை வெற்றி பெற வைக்க நினைக்கும் ஒவ்வொருவரையும் அரவணைப்பது தான் நல்லது. உடல்நிலை கருதிதான் ஜானகி அம்மா ஒதுங்கிக் கொண்டார். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்தார். அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். ஆனால் அது தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்," என்று கே.சி. பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கிளை செயலாளர் அளவிலேயே செயல்படுவதாகவும், யாரையும் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். மேலும், எடப்பாடி பேசுவது எல்லாம் அரசியல் அறியாமையில் பேசுவதாகவும் அவர் கூறினார்.

"அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் தந்தை சொத்து அல்ல. அது ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து," என்று கே.சி. பழனிச்சாமி வலியுறுத்தினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இறுதியாக, ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல் கட்டமாக சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...