கோவில்கள் வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்து

கோவையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசினார். அயோத்தி, சித்ரகூடத்தில் பாஜக தோல்வி குறித்தும், சி.பி.எஸ்.இ தேர்வில் ஹிந்தி திணிப்பு குறித்தும் விமர்சித்தார்.


Coimbatore: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு மற்றும் இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன், சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்தார். "ராமர் பிறந்த அயோத்தியிலும், வனவாசம் சென்ற சித்ரகூடத்திலும் பாஜக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, கோவில்கள் வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்," என்றார் அவர்.

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ தேர்வு அறிவிப்புகளில் ஹிந்தி மொழி பாடத்திற்கு 10% மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருப்பதை விமர்சித்த அவர், "இது ஹிந்தி அல்லாத மாநில மாணவர்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்கள் மற்றும் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி," என்றார். மேலும், இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் அடக்கப்படுவதையும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதையும் அவர் கடுமையாக விமர்சித்தார். "140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். அதை திரும்பப்பெற வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, தமிழகத்தின் ரயில் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றம்சாட்டினார். "வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்திற்கு மிகக் குறைவான முதலீடுகளே செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...