கோவில்கள் வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்து

கோவையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசினார். அயோத்தி, சித்ரகூடத்தில் பாஜக தோல்வி குறித்தும், சி.பி.எஸ்.இ தேர்வில் ஹிந்தி திணிப்பு குறித்தும் விமர்சித்தார்.


Coimbatore: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு மற்றும் இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன், சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்தார். "ராமர் பிறந்த அயோத்தியிலும், வனவாசம் சென்ற சித்ரகூடத்திலும் பாஜக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, கோவில்கள் வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்," என்றார் அவர்.

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ தேர்வு அறிவிப்புகளில் ஹிந்தி மொழி பாடத்திற்கு 10% மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருப்பதை விமர்சித்த அவர், "இது ஹிந்தி அல்லாத மாநில மாணவர்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்கள் மற்றும் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி," என்றார். மேலும், இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் அடக்கப்படுவதையும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதையும் அவர் கடுமையாக விமர்சித்தார். "140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். அதை திரும்பப்பெற வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, தமிழகத்தின் ரயில் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றம்சாட்டினார். "வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்திற்கு மிகக் குறைவான முதலீடுகளே செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...