கோவை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற மளிகைக் கடை உரிமையாளர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குணசேகரன் என்ற மளிகைக் கடை உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார். மகள் காதல் திருமணம் செய்து பணம், நகைகளை எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இச்சம்பவம் நடந்தது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் லோகநாதபுரம் முதலியார் வீதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகளும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் மகனும் உள்ளனர். புவனேஸ்வரி கோவையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த மாதம் 7ஆம் தேதி சுற்றுலா செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியேறிய புவனேஸ்வரி, 18ஆம் தேதி நவீன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும், வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4 பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், குணசேகரன் தனது மனைவி மற்றும் மகனுடன் ஜூலை 8 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார். அப்போது, அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் குணசேகரன் கூறுகையில், "எனது மகள் எடுத்துச் சென்ற 5 லட்சம் ரூபாய், 4 பவுன் தங்க நகை மற்றும் கடை விற்பனை மூலம் வங்கிக்குச் சென்ற G-pay தொகை ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளேன்" என்றார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...