கோவை ஒண்டிப்புதூரில் மனைவி, மகள்களை கொன்ற குடிகார தந்தை கைது

கோவை ஒண்டிப்புதூரில் குடிப்பழக்கத்தால் வேலையை இழந்த தந்தை, பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் இரு மகள்களை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் குடும்பத் தலைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கராஜ் (40) என்ற கூலித் தொழிலாளி, கடந்த ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்தி வந்தார். இதனால் அவரது மனைவி புஷ்பா (35) உடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.



இந்நிலையில், ஜூலை 8 ஆம் தேதி காலை, தங்கராஜ் தனது மனைவி மற்றும் இரு மகள்களான ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகியோர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தங்கராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் முரணான தகவல்களை அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், குடிப்பதற்கு பணம் கேட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தங்கராஜ் கோபத்தில் முதலில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளியதும், அவளை காப்பாற்ற முயன்ற மனைவி புஷ்பாவையும், பின்னர் இளைய மகள் ஷிவானியையும் தொட்டியில் தள்ளி, அதன் மூடியை மூடி கொலை செய்த உண்மை வெளிப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தங்கராஜை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...