கோவை உக்கடம் பெரியகுளம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் உக்கடம் பெரியகுளம்-கரும்புக்கடை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை ஜூலை 11 அன்று நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (ஜூலை 11) உக்கடம் பெரியகுளத்தில் இருந்து கரும்புக்கடை வழியாக செல்லும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண் 86-க்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த பாசன வாய்க்காலின் நிலையை ஆணையர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது, வாய்க்காலை தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொது) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் பல மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...