தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி ஆ.ராசா

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, கோவை வடக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.


Coimbatore: நீலகிரி மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஜூலை 11 அன்று நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்டத்தின் கூடலூர் நகராட்சி மற்றும் வீரபாண்டி பேரூராட்சி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் எம்.பி ஆ.ராசா.

சாந்திமேடு, செல்வபுரம், வட்டப்பாறை, திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம், கணேசபுரம், கவுண்டம்பாளையம், புதுப்புதூர், பழையபுதூர், தெக்குப்பாளையம், நாயக்கனூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளின் வாக்காளர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம், கூடலூர் நகர செயலாளர் அ.அறிவரசு, வீரபாண்டி பேரூர் கழகச் செயலாளர் வே.சுரேஷ் மற்றும் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஆ.ராசா, தொடர்ந்து மக்கள் நலனுக்காக உழைப்பதாக உறுதியளித்தார். அவர் தனது உரையில், "நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன். நமது பகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...