பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் 26 கட்டிடங்களுக்கு சீல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது.

மகாலிங்கபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வணிக கட்டிடங்களும் உள்ளன. இவற்றில் பல கட்டிடங்கள் வணிக பயன்பாட்டு அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று கடைகளுக்கு சீல் வைக்க வந்த நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகளை மகாலிங்கபுரம் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 66 கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் 40 கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள 26 கடைகளுக்கு மட்டுமே நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...