கோவை ராஜவீதியில் முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடையில் முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகையை திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகையை மர்ம நபர் திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் ஆர் வி நகைக்கடை என்ற பெயரில் ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதியில் நகைக்கடைகள் நடத்தி வருகிறார். நேற்று காலை, ராஜவீதியில் உள்ள கடைக்கு வந்த மர்ம நபர் பத்து சவரன் சங்கிலி கேட்டுள்ளார். டிசைன்களைப் பார்த்த அந்த நபர் திடீரென ஒரு தங்க சங்கிலியை கீழே போட்டு, அனைவரும் இருந்ததால் அதை எடுத்துக் கொடுத்துள்ளார். பின்னர் டிசைன் சரியில்லை என்று கூறி மற்ற கடைகளுக்குச் சென்றுள்ளார்.

அன்று மாலை, நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு வீட்டுக்கு மதிய உணவுக்குச் சென்றபின், அதே நபர் மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் விஷ்ணுவின் தந்தை இருந்த நிலையில், காலையில் பார்த்த அதே தங்க சங்கிலி வேண்டும் எனவும், மற்ற கடைகளில் அது போன்ற டிசைன் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய விஷ்ணுவின் தந்தை நகையை எடுப்பதற்கு நகர்ந்த கணத்தில், கடையில் வைத்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை திருடிவிட்டு, நகை வேண்டாம் என்று கூறி அந்த நபர் தப்பியோடிவிட்டார். சந்தேகம் அடைந்த விஷ்ணுவின் தந்தை நகைகளைச் சரிபார்த்தபோது, 83 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவின் தந்தை உடனடியாக தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார்.



கடைக்கு வந்த விஷ்ணு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இது தொடர்பாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடையில் முதியவரின் கவனத்தை திசைதிருப்பி 5 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், பல்வேறு கடைகளில் திருட முயன்ற அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அதன் காரணமாக மாஸ்க் அணிந்திருந்ததாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...