பொள்ளாச்சி அருகே சாலையில் நீதிபதி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி (58) மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நீதிபதி உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி கருணாநிதி (58) இன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மளிகை கடைக்கு தனது காரில் வந்து இறங்கிய நீதிபதி கருணாநிதி, சாலையை கடக்க முயன்றபோது, உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த மோதலில் பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றது.



சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, நீதிபதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...