தாராபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் அனுசரிப்பு

தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சர் பொல்லானின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் பொல்லானின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கயல்விழி, பொல்லானின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். "கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்டவர் மாவீரர் பொல்லான். பிரிட்டிஷ் ராணுவ ரகசியங்களை மாறுவேடத்தில் தீரன் சின்னமலைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். 1801 காவிரி கரைப்போர், 1802 அரச்சாலையூர் போர், 1804 ஓடாநிலை போர்களில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான் முக்கிய பங்கு வகித்தார்" என்று அவர் குறிப்பிட்டார்.



அமைச்சர் மேலும் தொடர்ந்து, "பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஆடி 1ம் தேதி அரச்சலூரை அடுத்த நல்லமங்காபாளையத்தில் பொல்லானைத் தலைகீழாகக் கட்டிக் கொன்றனர். அரச்சலூர் நல்லமங்காபாளையத்தில் இன்று நடைபெறும் பொல்லானின் 219வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர்" என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுகவினர் மற்றும் தமிழ் புலி கட்சியினர் செய்திருந்தனர். மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன், திமுக மகளிர் அணி அமுதா, ஆரோன் செல்வராஜ், ஆதிதிராவிட நலத்துறை உறுப்பினர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...