கோவை: வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது

கோவை கரடிமடை அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த ராமசாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் இந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் கரடிமடை அருகே உள்ள வெள்ளி மேடு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டுப் பன்றி மற்றும் முயல் வேட்டைக்காக வைக்கப்படும் 'அவுட்க்காய்' எனப்படும் நாட்டு வெடியால் கால்நடைகள், யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் பலத்த காயமடைவதுடன், சில சமயங்களில் உயிரிழப்பதும் உண்டு. இதனைத் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



மதுக்கரை வனச்சரகம் உட்பட்ட கரடிமடை பிரிவு பூலுவபட்டி கிராமம் அடுத்த வெள்ளி மேடு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்ற கருஞ்சி என்பவர் வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டு வெடி குண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

பூலுவப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோமதியின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் ராமசாமியின் வீட்டில் இரண்டு நாட்டு வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வெடி பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமசாமியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...