கோவையில் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மதிமுக இளைஞரணி மனு

கோவை மாநகர போக்குவரத்து ஆணையரிடம் மதிமுக இளைஞரணியினர் தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மனு அளித்தனர். நகரப் பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து ஆணையரை இன்று (ஜூலை 18) சந்தித்த மதிமுக இளைஞரணியினர், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகர் பகுதிகளில் தனியார் பேருந்துகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நேரங்களில் (Peak Hours) மாநகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் மீறி இவ்வாறு பேருந்துகள் இயக்கப்படுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மதிமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் இராஜீவ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...