திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளி திருவிளக்கு பூஜை: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழிபட்டனர். சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆவுடைநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில் முன்னதாக, ஆவுடைநாயகி அம்பாள் மற்றும் ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

பூஜையில் பங்கேற்றவர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மாங்கல்யம், தேங்காய், வாழைப்பழம், அரிசி கொண்டு பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழித்திடவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், சுமங்கலி பெண்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் குத்துவிளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...