போத்தனூர் அருகே பூட்டிய வீட்டில் நகை மற்றும் கார் கொள்ளை

கோவை மாவட்டம், போத்தனூர் கருப்பராயப் கோவில் வீதியை சேர்ந்தவர் ஷா ஆலம் (43). இவர் கடந்த 16ம் தேதி தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு நேற்று கோவை திரும்பியுள்ளார். 

அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷா ஆலம், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை, 30,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாண்ட்ரோ காரும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் ஷா ஆலம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவிடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...