பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தொடங்கக் கோரி DYFI அமைப்பினர் போராட்டம்

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு DYFI அமைப்பினர் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்கக் கோரி போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் போராட்டம் நடைபெற்றது. கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

DYFI கோவை மாவட்டச் செயலாளர் அர்ஜுன் கூறுகையில், "ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் விலை உயர்வுக்குப் பின்பு, சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியுள்ளனர். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கும் 900 ரூபாய் பேக்கேஜை பி.எஸ்.என்.எல். 400 ரூபாய்க்கு வழங்க முடியும். ஆனால், இன்றுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு சென்னையில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டுமே பி.எஸ்.என்.எல். 4ஜி டவர் நிறுவப்பட்டுள்ளது. தற்போது டாடா நிறுவனத்திடம் இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசால் செய்ய முடியாததை தனியார் செய்ய முடியும் என்று அரசு கருதினால், இந்த அரசு மக்களுக்கானதா அல்லது தனியாருக்கானதா என்ற கேள்வி எழுகிறது" என்றார்.



"தனியாருக்கு டெண்டர் விடுவதை தவிர்த்து, அரசே அதற்கான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தீர்வு காண வேண்டும். பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நாடு முழுவதும் DYFI சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்று அர்ஜுன் எச்சரித்தார்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...