உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வு மற்றும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், நகரச் செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர் ராஜன், பிரனேஷ், முருகேசன், சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் பல்லடம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...