அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி இணைந்து நடத்திய "தூய்மைப் பணித் திட்ட நிறைவு விழா"

கோவை அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் தூய்மைப் பணித்திட்டம் நிறைவு விழா மற்றும் பள்ளி வளாக சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் இன்று கோவை கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் அத்தார் ஜமாத் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அரசு உதவுபெரும் பள்ளியான அத்தார் ஜமாத் பள்ளிக் கட்டிடம் 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் வர்ணம் அடித்து தரப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் தூய்மையை கருத்தில் கொண்டு அப்பள்ளிக்கு குப்பைத்தொட்டிகள், வகுப்பறை தூய்மை செய்யும் கருவிகள், தண்ணீர் அருந்த பாத்திரங்கள், குவளை, கழிப்பிடத் தூய்மைக்கு வாளி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் அறம் அறக்கட்டளை நிறுவனர், உறுப்பினர்கள், அத்தார் ஜமாத் பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...