கோவையில் அழகு கலை பயிற்சி முறையாக கற்றுத் தராததால் பணத்தை திரும்ப கேட்டு பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்

கோவையில் அழகு கலை பயிற்சியளிப்பதாக பணம் வாங்கி முறையாக கற்றுத் தராததால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

Professional beautician என்ற அழகு கலை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனம், ஐ திரைப்படத்தில் அழகு கலை நிபுணராக வரும் நடிகை ஒஜாஸ் ராஜானி கொண்டு அழகு கலை குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாக கூறி அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து கோவை,திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர், அவர்களிடமிருந்து கட்டணமாக 1500 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் அந்த நிறுவனம் அறிவித்த படி போதுமான இட வசதிகள் இல்லாமலும், ஒரே அறையில் 400 நபர்களை அமர வைத்துள்ளனர். இதனால் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தனியாக அமர வைத்ததாக தெரிவித்தனர், மேலும் காலை முதல் ஒரே ஒரு வகுப்பு மட்டுமே எடுத்ததாகவும் அங்கு வந்த பெண்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் தங்களிடம் பெற்ற பணத்தில் ஆயிரம் ரூபாயாவது திருப்பி தர வேண்டும் என ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா 500 ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக கூறினார், ஆனாலும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ரகளையில் ஈடுபட்டனர், இதை அடுத்து போலிஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...