கோவை பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ திருப்பி அளித்த ஓட்டுநர், நடத்துனர்

கோவையில் சோமனூர்-காந்திபுரம் வழித்தடப் பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் K.விஜயகுமார், நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் பாராட்டினார்.


கோவை: கோவையில் அரசு பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கோவையில் TN 38 N 3524 எண் கொண்ட 20A வழித்தட பேருந்தில் சோமனூர் முதல் காந்திபுரம் வரை ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோர் பணியாற்றினர். இந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் பயணி தனது உடைமைகளை மறந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சேர்ந்து, அந்த பெண் பயணியை கண்டுபிடித்து, அவரது உடைமைகளை திருப்பி ஒப்படைத்துள்ளனர். அதில் ரூ.20,000 பணமும், பயணி வைத்திருந்த அனைத்து பொருட்களும் இருந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண் பயணி, ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 23) கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், நேர்மையாக நடந்துகொண்ட ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை அழைத்து பாராட்டினார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...