ஆழியார் அணை நிரம்பியது: 11 மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் ஆழியார் அணை நிரம்பியது. பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை இன்று முழு கொள்ளளவை எட்டியது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1210 கன அடி உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டது.



அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதையடுத்து அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆழியார் ஆற்று கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில், ஆழியார் அணை முதலில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...