ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி அதிமுக உறுப்பினர்கள் தர்ணா

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி தர்ணா போராட்டம் நடத்தினர். கட்டண உயர்வு மற்றும் மக்களை ஏமாற்றும் திட்டம் என குற்றம்சாட்டினர்.


Coimbatore: கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகியோர் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், "திராவிட மாடல் அரசு இலவச வீடு திட்டம் போல ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது" என்று குற்றம்சாட்டினார். மேலும், இத்திட்டத்தில் ஒரு சதுர அடிக்கான அனுமதி கட்டணம் ₹44லிருந்து ₹88 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் கனவை சிதைக்கும் செயல் என்றும் கூறினார்.



அதிமுக உறுப்பினர் பிரபாகரன் மேலும் தொடர்ந்து, "இந்த ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை அரசு திரும்பப் பெறாவிட்டால், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த தர்ணா போராட்டம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...