தொண்டாமுத்தூர் அருகே மாட்டுத் தீவனத்தை உண்ட காட்டு யானைகள்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் இரண்டு காட்டு யானைகள் விவசாயியின் தோட்டத்திற்குள் நுழைந்து, மாட்டுக்கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தவிட்டை உண்டு சென்றன. இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசிக்கின்றன. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைகின்றன. இவ்வாறு வரும் யானைகள் வீடுகள், ரேஷன் கடைகள், உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.


வனத்துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து கண்காணித்து, ஊருக்குள் நுழையும் யானைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் வசிக்கும் விவசாயி கதிரவனின் தோட்டத்திற்கு நள்ளிரவில் இரண்டு காட்டு யானைகள் வந்துள்ளன. அவை மாட்டுக்கொட்டகையில் உள்ள அறையில் மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு மூட்டையை சாப்பிட்டுச் சென்றுள்ளன.


யானைகள் அறையின் கதவை உடைத்து, தவிடு மூட்டையை முழுவதுமாக உண்டுவிட்டுச் சென்றுள்ளன. ஆனால், அதிர்ஷ்டவசமாக மாட்டுக்கொட்டகையில் இருந்த மாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை விவசாயி கதிரவன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை அவர் ஜூலை 28 அன்று வெளியிட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அன்றிரவே வனப்பகுதிக்குள் விரட்டியடித்துள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...