கோவையில் தூய்மை பணியாளரை கடத்தி தாக்கிய 5 பேர் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை ராமநாதபுரம் காமராஜர் நகரை சேர்ந்த தரணீதரன் (23) என்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் நேற்று (ஜூலை 27) ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நின்றிருந்தபோது, குடிபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் தகராறு செய்து, ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

செட்டிபாளையம் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, அந்த 5 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தரணீதரனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை மீண்டும் ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கி விட்டு சென்றனர். காயமடைந்த தரணீதரனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய தெற்கு உக்கடத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (29), மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அன்வர் (20), மூக்கன் (21), செட்டிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சுமன் (21), புல்லுக்காட்டை சேர்ந்த ரஞ்சித் (23) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...