உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சித்தனர். முறைகேடு புகார்களை அடுத்து நடந்த இந்த போராட்டத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் இருந்தது.

கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும், சார்பதிவாளர் தாமோதரன் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் குடும்பத்தினரின் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சார்பதிவாளரை கண்டித்து ஜூலை 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சார்பதிவாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட அதிகாரிகள், கணியூர் சார்பதிவாளர் தாமோதரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, முற்றுகை போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தால் உடுமலை அருகே கணியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...