அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் போன்ற இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மறையூர் கோவில் கடவு பகுதியில் உள்ள பாம்பாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,047 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியாக இருக்கும் நிலையில், தற்போது நீர்மட்டம் 88.52 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 4,298 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ரா பாளையம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழவு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...