நடுரோட்டில் பழுதான அரசு பேருந்தை தள்ளி இயக்கிய மாணவர்கள், பொதுமக்கள்

பொள்ளாச்சியில் நடுரோட்டில் பழுதடைந்த அரசு பேருந்தை மாணவர்களும் பொதுமக்களும் தள்ளி இயக்கினர். அடிக்கடி பழுதாகும் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை.


கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 51A எண் கொண்ட அரசு பேருந்து, திருவள்ளுவர் திடல் அருகே திடீரென பழுதடைந்து நின்றது. பேருந்து ஓட்டுநர் பல முறை முயற்சி செய்தும் பேருந்து இயங்கவில்லை.



இதனால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் பேருந்தை பின்புறமாகவும், பின்னர் முன்புறமாகவும் தள்ளினர்.



இறுதியாக பேருந்து இயங்கத் தொடங்கியது.

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை, நெகமம், பெதப்பம்பட்டி, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...