கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் ஆகஸ்ட் 1 அன்று பொறுப்பேற்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு இரக மேம்பாட்டில் அனுபவம் கொண்டவர்.


Coimbatore: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் அவர்கள் ஆகஸ்ட் 1, 2024 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். புது தில்லியிலுள்ள வேளாண் விஞ்ஞானிகள் தேர்வாணையத்தின் (ASRB) பரிந்துரையின் படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) இந்த நியமனத்தை செய்துள்ளது.

முனைவர் கோவிந்தராஜ் ஏற்கனவே கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பயிர் மேம்பாட்டுத்துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர், 1991-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணிக்காக தேர்வானார்.

முனைவர் கோவிந்தராஜ் பயிர் இரகங்களை உருவாக்குதல், எரிசக்தி இரகங்களை உருவாக்குதல், மரபியல் இனங்களை சேகரித்தல் மற்றும் அவற்றை பெற்றோர்களாக பயன்படுத்தி புதிய கரும்பு இரகங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட கோ 0232 மற்றும் கோ 0233 கரும்பு இரகங்கள் வட இந்தியாவில் பிரபலமானவை. மேலும், கோ 09004 கரும்பு இரகம் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

குறிப்பிடத்தக்க சாதனையாக, முனைவர் கோவிந்தராஜ் உருவாக்கிய SBIEC 14006 என்ற எரிசக்தி கரும்பு இரகம் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவரது சிறந்த பங்களிப்புக்காக 'சர். T. S. வெங்கட்ராமன் சிறந்த ஆராய்ச்சியாளர்' விருது உட்பட பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும், முனைவர் கோவிந்தராஜ் ஃபிஜி நாட்டின் கரும்பு ஆலோசகராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்டு, அந்நாட்டின் தேசிய கரும்பு இரகங்கள் உருவாக்கத் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். இந்த நியமனம் கரும்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...