கோவையில் முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகள்: 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. 6 முதல் 18 வயது வரையிலான பிரிவுகளில் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகளை நடத்தின.

இந்த போட்டிகள் 6 வயது முதல் 8 வயது வரை, 8 வயது முதல் 12 வயது வரை, 12 வயது முதல் 14 வயது வரை மற்றும் 14 வயது முதல் 18 வயது வரை என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன. ஒத்தகம்பு, இரட்டை கம்பு, வேல்கம்பு, வாள், சுருள்வாள் என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.



போட்டிகளின் தொடக்க விழாவில் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசியர் தங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக உயர்நீதி மன்ற மதுரை கிளை சட்டப்பிரிவு துணை ஆணையர் அறிவழகன், சேலம் உளவுத்துறை துணை ஆணையர் சிந்துஜா ஆகியோர் கலந்துக்கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம் மணி, தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் நிறுவனர் ஆசான் குமார், கேரளா மாமாங்கம் களரி கேந்ரா நிறுவனர் ஆசான் சுலைம், தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் மதுசூதன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக சிலம்பம் விளையாட்டு சங்க ஊட்டி தலைவர் ஆல்பட் சிறப்புரை வழங்கினார்.

இந்த போட்டிகளுக்கு கிருஷ்ணன், கோபால், ரங்கசாமி, ராமபாலன், ஆனந்தகுமார், முத்துபாண்டி, ரேமா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். கோவையில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சிலம்ப பயிற்சி மையங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் நன்றி கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...