கோவை TNAU-வில் இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை அறிவிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி 300 இடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) இன்று (ஆகஸ்ட் 5) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024-2025 கல்வியாண்டிற்கான இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) (AU) ஆகியவற்றிற்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு (Academic Stream) மற்றும் 7.5% இடஒதுக்கீட்டிற்கான இணையவழி கலந்தாய்வு ஜூன் 23 முதல் 26 வரை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கல்விப் பிரிவில் (Academic Stream) ஏற்பட்ட காலியிடங்களுக்கு 6வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 8 (வியாழக்கிழமை) அன்று 300 இடங்களுக்கு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம் மற்றும் சாதி அடிப்படையில் தற்காலிக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களான 10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழுடன் கோவை TNAU வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் ஆகஸ்ட் 8 அன்று நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணிற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது சந்தேகங்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலோ வாரநாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என TNAU நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...